Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மழையால் பெ.ஆ., கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து

மழையால் பெ.ஆ., கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து

மழையால் பெ.ஆ., கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து

மழையால் பெ.ஆ., கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து

ADDED : செப் 15, 2025 01:27 AM


Google News
கரூர்:கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, மழை காரணமாக தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு, 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து, நேற்று வினாடிக்கு, 185 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பி ஆற்றில் தண்ணீர் சென்றது.

மாயனுார் கதவணைகரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று காலை தண்ணீர் வரத்து, 15,264 அடியாக இருந்தது. அதில், டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடிக்காக காவிரியாற்றில், 13,794 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,470 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.ஆத்துப்பாளையம் அணை

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 9.52 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us