Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாரியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்

மாரியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்

மாரியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்

மாரியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்

ADDED : ஜூன் 07, 2025 01:48 AM


Google News
கரூர் :கரூர் மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழாவையொட்டி, நேற்று புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது.

கரூர் மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழா கடந்த மாதம், 11 முதல் நடந்து வருகிறது. கம்பம் நடுதல், பூச்சொரிதல் விழா, காப்பு கட்டுதல், தேரோட்டம், மா விளக்கு ஊர்வலம், பால் குடம் ஊர்வலம், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் கம்பம் ஆற்றுக்கு செல்லுதல், பஞ்ச பிரகாரம் ஆகிய நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடந்தன.

நேற்று மாலை, புஷ்ப பல்லக்கில் உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். இன்று ஊஞ்சல் உற்சவம், நாளை அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சி நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us