/உள்ளூர் செய்திகள்/கரூர்/குளித்தலையில் மக்கள் குறை தீர் நாள் முகாம்குளித்தலையில் மக்கள் குறை தீர் நாள் முகாம்
குளித்தலையில் மக்கள் குறை தீர் நாள் முகாம்
குளித்தலையில் மக்கள் குறை தீர் நாள் முகாம்
குளித்தலையில் மக்கள் குறை தீர் நாள் முகாம்
ADDED : ஜூன் 15, 2025 01:51 AM
குளித்தலை, குளித்தலை தாலுகா அலுவலகத்தில், வட்ட வழங்கல் துறை சார்பில், நேற்று மக்கள் குறைதீர் முகாம் நடந்தது.
டி.எஸ்.ஓ., வைரப்பெருமாள் தலைமை வகித்தார். மண்டல துணை தாசில்தார் நீதிராஜன், பொது மக்களிடமிருந்து குடும்ப அட்டை சம்பந்தமான கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
முகாமில் ஆர்.ஐ.. யுவராஜ், அலுவலக உதவியாளர் அதியமான் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டு, அரசு திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல்போன் எண் இணைத்தல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை என, பல்வேறு வகையில் மனுக்கள் பெறப்பட்டன.