/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
ADDED : செப் 20, 2025 01:49 AM
கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த, புரட்டாசி மாத பிரதோஷ விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி சிலைக்கு புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி, நேற்று மதியம், 4:30 மணி முதல் பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபி ேஷகம் நடந்தது. ஏராளமானோர் சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து மூலவர், நடராஜர் மற்றும் நந்தி சிலைக்கு நடந்த, மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை, சமேத மேகபாலீஸ்வரர் கோவில், புன்னம் புன்னைவன நாதர் உடனுறை, புன்னைவன நாயகி கோவில், திருகாடுதுறை மாதேஸ் வரன் கோவில், நத்தமேடு ஈஸ்வரன் கோவில்களிலும் ஆவணி மாத பிரதோஷத்தை யொட்டி, நந்தி சிலைகள் மற்றும் மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
* குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழங்கள் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
இதேபோல், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், குளித்தலை மீனாட்சி சுந்தரேஸ்வர், மேட்டுமருதுார் ஆராவமிதீஸ்வரர், மருதுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தண்ணீர்பள்ளி ஏகாம்பரேஸ்வரர், பெரியபாலம் நதிஈஸ்வரர், ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர், சின்னரெட்டியபட்டி ஆவுடைலிங்கேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்த ரேஸ்வரர், இடையபட்டி ரத்தினகிரீஸ்வரர், கழுகூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.ஏராளமானோர் சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.