Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் அருகே கழிவுநீர் வாய்க்காலில் செடிகளை அகற்ற மக்கள் வலியுறுத்தல்

கரூர் அருகே கழிவுநீர் வாய்க்காலில் செடிகளை அகற்ற மக்கள் வலியுறுத்தல்

கரூர் அருகே கழிவுநீர் வாய்க்காலில் செடிகளை அகற்ற மக்கள் வலியுறுத்தல்

கரூர் அருகே கழிவுநீர் வாய்க்காலில் செடிகளை அகற்ற மக்கள் வலியுறுத்தல்

ADDED : செப் 06, 2025 01:20 AM


Google News
கரூர் :கரூர் அருகே, கழிவுநீர் வாய்க்காலில் முளைத்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் அருகே தான்தோன்றிமலை பகுதியில், கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. அந்த பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்நிலையில், கழிவு நீர் வாய்க்கால் தெரியாத அளவில், செடிகள் அதிகளவில் முளைத்துள்ளது. இதனால், மழை பெய்யும் போது, மழைநீருடன் கழிவு நீர் செல்லாமல், சாலையில் ஓடும் அபாயம் உள்ளது.

சில மாதங்களுக்கு முன், தான்தோன்றிமலை பகுதியில் மழை பெய்த போது, வாய்க்காலில் இருந்து கழிவுநீர், மழைநீருடன் வெளியேறி குடியிருப்பு பகுதியில் சாலையில் ஓடியது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

வரும் வடகிழக்கு பருவமழையின் போது, அதிகளவில் மழை பெய்யும் போது, வாய்க்காலில் இருந்து, கழிவுநீர், மழைநீர் குடியிருப்பு பகுதியில் சாலையில் ஓடுவதை தடுக்க, சிவாஜி நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் உள்ள, செடிகளை அகற்ற மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us