Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சாயும் நிலையில் மின் கம்பம் மாற்ற மக்கள் வேண்டுகோள்

சாயும் நிலையில் மின் கம்பம் மாற்ற மக்கள் வேண்டுகோள்

சாயும் நிலையில் மின் கம்பம் மாற்ற மக்கள் வேண்டுகோள்

சாயும் நிலையில் மின் கம்பம் மாற்ற மக்கள் வேண்டுகோள்

ADDED : மே 22, 2025 02:05 AM


Google News
கரூர், கரூர், ஆத்துார் பிரிவு சாலையில் மின் கம்பம் சாயும் நிலையில் உள்ளதை மாற்ற வேண்டும்.

கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழ், ஆத்துார் பிரிவு சாலையில் ஏராளமான மின் கம்பங்கள் உள்ளன. ஒரு மின் கம்பம் கீழே போதிய பிடிமாணம் இல்லாமல் மெல்ல, மெல்ல சாய்ந்து வருகிறது. இப்படியே விட்டுவிட்டால், மின் கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. பல மின் கம்பங்களில், செடி, கொடிகள், வளர்ந்து கிடக்கின்றன.

மின் கம்பங்கள் இருப்பதே தெரியாத அளவில், செடி, கொடிகள் சூழ்ந்துள்ளன. செடிகள் மூலம் மின்சாரம் பாய்வதற்கு வாய்ப்பு உள்ளதால், அதன் அருகில் செல்பவர்கள் மின்சாரத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. உடனடியாக சாயந்த மின் கம்பத்தை மாற்றவும், மின் கம்பங்களில் படர்ந்த செடி, கொடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us