Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ உயிருக்கு ஆபத்தான தெருநாய்கள் கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை

உயிருக்கு ஆபத்தான தெருநாய்கள் கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை

உயிருக்கு ஆபத்தான தெருநாய்கள் கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை

உயிருக்கு ஆபத்தான தெருநாய்கள் கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை

ADDED : ஜூன் 30, 2025 04:30 AM


Google News
கரூர்: கரூரில், தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, 48 வார்டுகளில் தெரு நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதால், நாளுக்கு நாள் அவற்றின் தொல்-லையும் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த, திருச்சி, கோவை, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் தெரு நாய்கள் இரவு, பகலாக சுற்றித்திரிகின்றன.

பொதுமக்கள், கால்

நடைகளை கடித்தும் வருகின்றன. சாலைகளின் மைய தடுப்புச்சு-வரின் இடைவெளி வழியாக, திடீரென குறுக்கே ஓடும் நாய்-களால், வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தெரு நாய்கள் ஹாயாக சுற்றித்திரிந்து அங்கேயே தங்கி விடுகின் றன. நாய்-களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us