/உள்ளூர் செய்திகள்/கரூர்/ காட்சி பொருளான தண்ணீர் தொட்டி பைபாஸ் சாலையில் மக்கள் தவிப்பு காட்சி பொருளான தண்ணீர் தொட்டி பைபாஸ் சாலையில் மக்கள் தவிப்பு
காட்சி பொருளான தண்ணீர் தொட்டி பைபாஸ் சாலையில் மக்கள் தவிப்பு
காட்சி பொருளான தண்ணீர் தொட்டி பைபாஸ் சாலையில் மக்கள் தவிப்பு
காட்சி பொருளான தண்ணீர் தொட்டி பைபாஸ் சாலையில் மக்கள் தவிப்பு
ADDED : மே 26, 2025 04:12 AM
கரூர்: திருச்சி, மதுரை, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குடிநீர் தொட்டிகளை பராமரித்து, நாள்தோறும் தண்ணீர் நிரப்ப வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்மாவட்ட மக்களின் நுழைவு வாயிலாக உள்ள கரூர் நகரை சுற்றி, திருச்சி, மதுரை, சேலம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதன் வழியாக செல்லும் பொதுமக்களின் குடிநீர் வச-திக்காக, அந்தந்த பஞ்., சார்பில் சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்--ளன. அதில், நாள்தோறும் தண்ணீர் நிரப்பப்பட்டு வந்தது. தேசிய நெடுஞ்சாலையில் டூவீலர், கார், லாரி ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகள், சின்டெக்ஸ் தொட்டியில் உள்ள நீரை பிடித்து பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் தண்ணீர் தொட்டிகளை பராமரிக்காமல் கிடப்பில் விட்டனர். இதனால், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெரும்-பாலான தண்ணீர் தொட்டிகள் சேதமடைந்துள்ளன. சில பகுதி-களில் உள்ள தொட்டிகளில் தண்ணீரும் நிரப்பப்படுவது இல்லை. இதனால் தண்ணீரின்றி வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்-ளாகின்றனர். எனவே, சேதமடைந்த குடிநீர் தொட்டிகளை மாற்றி, புதிய சின்டெக்ஸ் தொட்டி வைத்து, நாள்தோறும் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்-டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.