Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் ரயில்வே ஸ்டேஷனில் நாய்கள் சுற்றித்திரிவதால் பீதியில் பயணிகள்

கரூர் ரயில்வே ஸ்டேஷனில் நாய்கள் சுற்றித்திரிவதால் பீதியில் பயணிகள்

கரூர் ரயில்வே ஸ்டேஷனில் நாய்கள் சுற்றித்திரிவதால் பீதியில் பயணிகள்

கரூர் ரயில்வே ஸ்டேஷனில் நாய்கள் சுற்றித்திரிவதால் பீதியில் பயணிகள்

ADDED : செப் 18, 2025 01:35 AM


Google News
கரூர் : கரூர் ரயில்வே ஸ்டேஷனில் சுற்றித்திரியும் நாய்களால் பயணிகள் பீதியில் உள்ளனர்.

கரூர் ரயில்வே ஸ்டேஷனில் நாள்தோறும், 25க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று செல்கின்றன. குறிப்பாக, கரூர்-சேலம் வழித் தடத்தில், வந்தே பாரத் உள்ளிட்ட புதிய ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால், பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள அனைத்து பிளாட்பாரங்களிலும், 25க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதை விரட்ட ரயில்வே நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

குறிப்பாக, பயணிகள் குழந்தைகளுடன், ரயில்களுக்காக காத்திருக்கும் அறையிலும், நாய்கள் படுத்து உறங்குகிறது. நாய்களை விரட்ட முயற்சிக்கும் போது, பயணிகளை கடிக்க பாய்கிறது. எனவே, ரயில்வே ஸ்டேஷனில் சுற்றித்திரியும் நாய்களை விரட்ட, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.47.04 கோடி கடன் உதவி வழங்கல்

கரூர், செப். 18

கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி கலையரங்கத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். துணை முதல்வர் உதயநிதி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவி மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த, 1,500 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளும், 659 சுய உதவி குழுக்களைச் சேர்ந்த, 5,677 உறுப்பினர்களுக்கு, 47.04 கோடி ரூபாய் கடன் உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், மகளிர் திட்ட இயக்குனர் தனசேகரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்த குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us