Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வேளாண்மை துறை சார்பில் ஒரு நாள் பயிற்சி முகாம்

வேளாண்மை துறை சார்பில் ஒரு நாள் பயிற்சி முகாம்

வேளாண்மை துறை சார்பில் ஒரு நாள் பயிற்சி முகாம்

வேளாண்மை துறை சார்பில் ஒரு நாள் பயிற்சி முகாம்

ADDED : மே 27, 2025 01:27 AM


Google News
கரூர்,கரூர் வட்டார வேளாண்மை துறை மற்றும் அட்மா திட்டத்தின் சார்பில், தீவன உற்பத்தி முறைகள் குறித்த, ஒரு நாள் பயிற்சி முகாம் குப்புச்சிப்பாளையத்தில் நேற்று நடந்தது.

அதில், மத்திய அரசின் உதவித்தொகை பெற தேவையான ஆவணங்கள், உயிர் உரங்கள் பயன்படுத்தும் முறை, கால்நடைகளுக்கு பசுந்தீவனம் தயாரிக்கும் முறைகள் உள்ளிட்ட, பல்வேறு தலைப்புகளில், வேளாண்மை அலுவலர் ரேணுகா தேவி விளக்கம் அளித்து பேசினார்.

பயிற்சி முகாமில், உதவி வேளாண்மை அலுவலர் செந்தில் வடிவு, கால்நடை மருத்துவர்கள் சேகர், சிவானந்தம், உதவி மருத்துவர் காவ்யா மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us