Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

ADDED : ஜூலை 05, 2025 02:00 AM


Google News
கரூர், கரூர் அருகே, சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.

கரூர் அருகே, தான்தோன்றிமலை அரசு உயர்நிலைப்பள்ளி, திருமண மண்டபம், கோவில்கள் மற்றும் வீடுகள் உள்ளன. அந்த வழியாக, 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொது மக்கள், வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில், அரசு உயர்நிலைப்பள்ளி சாலையில், பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்வோர், தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us