ADDED : ஜூலை 05, 2024 12:56 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, இனுங்கூர் பஞ்., காகம்பட்டியை சேர்ந்த பெண் கூலி தொழிலாளி, 37.
இவரது, 17 வயது மகள் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த, 2ல் பள்ளிக்கு சென்று விட்டு டவுன் பஸ்சில் ஏறி வந்தவர், வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.