Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் அருகே ரயில்வே பாலத்தில் மின்விளக்குகள் இல்லாததால் அவதி

கரூர் அருகே ரயில்வே பாலத்தில் மின்விளக்குகள் இல்லாததால் அவதி

கரூர் அருகே ரயில்வே பாலத்தில் மின்விளக்குகள் இல்லாததால் அவதி

கரூர் அருகே ரயில்வே பாலத்தில் மின்விளக்குகள் இல்லாததால் அவதி

ADDED : ஜன 03, 2024 12:47 PM


Google News
கரூர்: கரூர்-சேலம் இடையே, புதிதாக ரயில்வே பாதை அமைக்கப்பட்டு, கடந்த, 2013 முதல் பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. வாங்கல்-மண்மங்கலம் இடையே, ரயில்வே பாதை அமைக்கும் போது, மாரி கவுண்டன்பாளையத்தில் வாகனங்கள் செல்லும் வகையில், ரயில்வே பாலம் கட்டப்பட்டது. ஆனால், அப்போது மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை.

இந்நிலையில், வாங்கல்-மோகனுார் இடை யே காவிரியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்ட பிறகு, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, நாமக்கல் மாவட்டம் மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் பகுதிகளுக்கு அதிகளவில் வாகனங்கள், மாரி கவுண்டன்பாளையம் ரயில்வே பாலம் வழியாக சென்று வருகின்றன. தற்போது, ரயில்வே பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் பாலத்தில் வழிப்பறியும் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

எனவே, மண்மங்கலம்-வாங்கல் இடையே மாரிகவுண்டன்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தில், உடனடியாக மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us