Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி சாவு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி சாவு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி சாவு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி சாவு

ADDED : அக் 14, 2025 01:47 AM


Google News
குளித்தலை, பாலவிடுதி அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, கூலித்

தொழிலாளி உயிரிழந்தார்.

குளித்தலை அடுத்த கடவூர் டி.இடையபட்டி பஞ்சாயத்து, கிழக்கு அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 35, விவசாயக் கூலித் தொழிலாளி.

இவர் கடந்த, 11-ம் தேதி இரவு, 7:30 மணியளவில், மனைவி லீலா ராணியிடம் கடவூர் சென்று வருவதாக கூறி விட்டு சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு வரவில்லை. இந்நிலையில், இடையபட்டி கடவூர் மெயின் ரோட்டில் நடந்து செல்லும்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சுரேஷ்குமாருக்கு தலையில் படுகாயம்ஏற்பட்டது.

அந்த வழியாக சென்றவர்கள் உதவியுடன் அவரை மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் சோதனை செய்தபோது, ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக

தெரிவித்தனர்.

இது குறித்து அவரது மனைவி லீலாராணி கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us