/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா பஞ்ச பிரகார அலங்காரத்தில் அம்மன் கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா பஞ்ச பிரகார அலங்காரத்தில் அம்மன்
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா பஞ்ச பிரகார அலங்காரத்தில் அம்மன்
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா பஞ்ச பிரகார அலங்காரத்தில் அம்மன்
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா பஞ்ச பிரகார அலங்காரத்தில் அம்மன்
ADDED : ஜூன் 06, 2025 01:57 AM
கரூர், கரூர் மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழாவையொட்டி, பஞ்ச பிரகாரம் அலங்காரத்தில் அம்மன் உற்சவர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கரூர் மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. நடப்பாண்டு கடந்த, 11ல் கம்பம் நடுதலுடன் விழா துவங்கியது. கடந்த, 28ல், முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் விழா நடந்தது.
நேற்று பஞ்ச பிரகாரம் அலங்காரத்தில் அம்மன் உற்சவர் திருவீதி உலா நடந்தது.
ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இன்று புஷ்ப பல்லக்கு, நாளை ஊஞ்சல், 8ல் அம்மன் குடி புகுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.