Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சேனை கிழங்கு பயிரில் ஊடுபயிராக சின்ன வெங்காயம் சாகுபடி தீவிரம்

சேனை கிழங்கு பயிரில் ஊடுபயிராக சின்ன வெங்காயம் சாகுபடி தீவிரம்

சேனை கிழங்கு பயிரில் ஊடுபயிராக சின்ன வெங்காயம் சாகுபடி தீவிரம்

சேனை கிழங்கு பயிரில் ஊடுபயிராக சின்ன வெங்காயம் சாகுபடி தீவிரம்

ADDED : அக் 13, 2025 05:42 AM


Google News
கரூர்: கரூர் மாவட்டத்தில், காவிரி, அமராவதி ஆற்றை நம்பி நெல், கரும்பு, மஞ்சள், வாழை பயிரிட்டனர். இந்த ஆறுகளில் சில ஆண்டுகளில் தண்ணீர் செல்லாத நிலை ஏற்பட்டது. இதனால், விவசாயிகள் வறட்சியை தாங்கும் கோரை புல் சாகுபடிக்கு மாறினர். இந்நிலையில், கடந்தாண்டு கரூர் மாவட்டத்தில் சராசரி மழையளவை விட, அதிகளவில் மழை பெய்தது. மேலும், மேட்டூர் அணை, அமராவதி அணைகளின் நீர்மட்டமும், தற்போது திருப்திகரமாக உள்ளது. இதனால், கரூர் மாவட்ட விவசாயிகள் முள்ளங்கி, சேனை கிழங்கு, கத்தரிக்காய் மற்றும் கீரை வகைகளின் சாகுபடிக்கு மாறி வருகின்றனர். அதில், சேனை கிழங்கு ஊடுபயிராக சின்ன வெங்காயம் பயிரிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, கரூர் மாவட்ட விவசாயிகள் கூறியதாவது:தவறிய மழை காரணமாக நெல், கரும்பு, வாழை,

மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை, கரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் மேற்கொள்ள முடியவில்லை. கோரை புல்லை பயிரிட்டோம். தற்போது, மழை காரணமாக விவசாய கிணறுகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதை வைத்து குறுகிய கால பயிர்களான, காய்கறி, கீரை சாகுபடி செய்ய தொடங்கியுள்ளோம். சேனை கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. அது அறுவடை நெருங்கும் நிலையில் ஊடுபயிராக சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு, சின்ன வெங்காயம் நடவு செய்து பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வருகிறது. சில மாதங்களில், சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us