Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/முதல்வர் குறித்து அவதுாறு பேச்சு; அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

முதல்வர் குறித்து அவதுாறு பேச்சு; அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

முதல்வர் குறித்து அவதுாறு பேச்சு; அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

முதல்வர் குறித்து அவதுாறு பேச்சு; அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

ADDED : ஜூலை 16, 2024 01:48 AM


Google News
கரூர்: சின்னதாராபுரம் அருகே நடந்த, பொதுக் கூட்டத்தில் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, அவதுாறாக பேசிய-தாக, அ.தி.மு.க.,வை சேர்ந்த இரண்டு தலைமை பேச்சாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் எம்.ஜி.ஆர்., திடலில், 2023 செப்., 17ல், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணா-துரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

அதில் பங்-கேற்ற அ.தி.மு.க., தலைமை பேச்சாளர்கள் சாம்ஸ் கனி, பேராவூ-ரணி திலீபன் ஆகியோர், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து, அவதுாறாக பேசியுள்ளனர்.இதுகுறித்து, போலீஸ் எஸ்.ஐ., மகாமுனி கொடுத்த புகார்படி, சின்னதாராபுரம் போலீசார் சாம்ஸ்கனி, பேராவூரணி திலீபன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us