சட்ட விரோதமாகலாட்டரி விற்றவர் கைது
சட்ட விரோதமாகலாட்டரி விற்றவர் கைது
சட்ட விரோதமாகலாட்டரி விற்றவர் கைது
ADDED : செப் 16, 2025 01:31 AM
அரவக்குறிச்சி :அரவக்குறிச்சி அருகே, ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
அரவக்குறிச்சி போலீசார், சீத்தப்பட்டி
காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே, தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை மலைக்கோவிலுார் அருகே உள்ள, லிங்கத்து பாறையை சேர்ந்த விஜய், 35, என்பவர் விற்பனை செய்து கொண்டிருந்தார்.உடனே அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.