ADDED : ஜூன் 22, 2024 12:48 AM
கரூர்: கரூர் வேலுச்சாமிபுரம் சக்தி நகர், மூன்றாவது கிராஸ் பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் ரவி, 43; டிரைவர்.
இவர் கடந்த, 17 ல் இரவு, குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பி வரவில்லை. நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கும் ரவி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ரவியின் மனைவி மீனா, 30; போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.