Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கள்ள நோட்டு மாற்ற முயன்ற ஓட்டல் தொழிலாளி கைது

கள்ள நோட்டு மாற்ற முயன்ற ஓட்டல் தொழிலாளி கைது

கள்ள நோட்டு மாற்ற முயன்ற ஓட்டல் தொழிலாளி கைது

கள்ள நோட்டு மாற்ற முயன்ற ஓட்டல் தொழிலாளி கைது

ADDED : செப் 10, 2025 02:04 AM


Google News
கரூர், கரூர் அருகே, கள்ள நோட்டை மாற்ற முயன்றதாக, ஓட்டல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தான்தோன்றிமலையை சேர்ந்தவர் காண்டீபன், 55; இவர், திருச்சி மாவட்டம், வயலுாரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். நேற்று மாலை விடுமுறையில் கரூர் வந்த காண்டீபன், தான்தோன்றி மலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு மது அருந்த சென்றுள்ளார். அப்போது, 500 ரூபாயை கொடுத்து, மதுபாட்டிலை கேட்டுள்ளார். அந்த பணம் கள்ள நோட்டு என தெரியவந்தது. இதையடுத்து, மதுபான கடை ஊழியர்கள், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தான்தோன்றிமலை போலீசார், காண்டீபனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us