Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/தரம் உயர்ந்த குளித்தலை அரசு மருத்துவமனை

தரம் உயர்ந்த குளித்தலை அரசு மருத்துவமனை

தரம் உயர்ந்த குளித்தலை அரசு மருத்துவமனை

தரம் உயர்ந்த குளித்தலை அரசு மருத்துவமனை

ADDED : ஜன 06, 2024 11:58 AM


Google News
குளித்தலை: குளித்தலை அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.

குளித்தலை அரசு மருத்துவமனை கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் மாவட்ட தலைமை மருத்துவ மனையாக தரம் உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டது. அரசு இணையதளத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, குளித்தலை என வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போதைய அரசு, குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனை என முறையாக சட்டசபையில் அறிவித்து அரசிதழில் வெளியிட்டது. இந்நிலையில், குளித்தலை அரசு மருத்துவமனை, கரூர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக செயல்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி, அப்போதைய கலெக்டர் பிரபுசங்கர் அறிவித்தனர். இதை கண்டித்து, தி.மு.க., தவிர அனைத்து அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் இந்த அறிவிப்பை திரும்ப பெறவேண்டும்.

குளித்தலை அரசு மருத்துவமனை மீண்டும் மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவிக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம், அரசு மருத்துவமனைக்கு முறையாக மாவட்ட தலைமை மருத்துவமனை என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து நேற்று காலை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, குளித்தலை என பெயர் பலகை டிஜிட்டல் முறையில் ஒட்டப்பட்டது. அனைத்து கட்சியினர், சமூக ஆர்வலர்கள் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us