Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நெல் சாகுபடி வயல்களில் அவுரி செடிகள் வளர்ச்சி

நெல் சாகுபடி வயல்களில் அவுரி செடிகள் வளர்ச்சி

நெல் சாகுபடி வயல்களில் அவுரி செடிகள் வளர்ச்சி

நெல் சாகுபடி வயல்களில் அவுரி செடிகள் வளர்ச்சி

ADDED : செப் 18, 2025 01:30 AM


Google News
கிருஷ்ணராயபுரம், வயலுார் கிராமத்தில், விவசாயிகள் நெல் சாகுபடி துவங்கும் வயல்களில், அவுரி செடிகள் வளர்ச்சி அடைந்து வருகிறது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் கிராமத்தில், சாகுபடி செய்யப்படும் வயல்களில் மண் உரம் இயற்கையாக கிடைக்கும் வகையில், அவுரி விதைகள் துாவப்பட்டது. தற்போது அவை வளர்ந்து பசுமையாக வளர்ச்சி அடைந்துள்ளது.

வளர்ந்த அவுரி செடிகளால் நெல் நடவு செய்யப்படும் வயல்களில், கூடுதல் சத்து கிடைத்து மகசூல் கிடைக்கிறது. தற்போது வளர்ந்த அவுரி செடிகளை டிராக்டர் இயந்திரம் கொண்டு உழவு பணிகள் செய்யப்படுகிறது. இதன் மூலம் அவுரி செடிகள் மக்கி இயற்கை உரமாக மாறுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us