Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.48 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.48 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.48 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.48 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ADDED : ஜூலை 10, 2024 06:57 AM


Google News
கரூர்: சாலைப்புதுார், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 4 லட்சத்து, 48 ஆயிரம் ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனையானது.கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சாலைப்புதுாரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.

இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடக்கிறது. கரூர், க.பரமத்தி ஒன்றியம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர். நேற்று நிலக்கடலை ஏலம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 193 மூட்டை களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 65.41 ரூபாய், அதிக பட்சமாக, 78.50 ரூபாய், சராசரியாக, 76.80 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 6,190 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 4 லட்சத்து, 48 ஆயிரத்து, 659 ரூபாய்க்கு விற்பனையானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us