Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தடாகோவிலில் அரசின் புகைப்பட கண்காட்சி

தடாகோவிலில் அரசின் புகைப்பட கண்காட்சி

தடாகோவிலில் அரசின் புகைப்பட கண்காட்சி

தடாகோவிலில் அரசின் புகைப்பட கண்காட்சி

ADDED : ஜூன் 26, 2025 01:47 AM


Google News
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே உள்ள, தடாகோவிலில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த, புகைப்பட தொகுப்பு கண்காட்சியை, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவில் பகுதியில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் புகைப்பட தொகுப்பு, பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது. ஏராளமானோர் கண்காட்சியை பார்த்து சென்றனர்.

இதில், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள், கலெக்டர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பங்கேற்ற முக்கிய அரசு நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட புகைப்படங்களை, பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us