வாரச் சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை
வாரச் சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை
வாரச் சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை
ADDED : ஜூன் 01, 2025 01:27 AM
கிருஷ்ணராயபுரம், சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழிகளின் விற்பனை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து இரும்பூதிப்பட்டியில் உள்ள சந்தையூர் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் செயல்படுகிறது. நேற்று சந்தையில் ஆடு, கோழி, காய்கறிகள், விற்பனை செய்யப்பட்டது. 7 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 6,250 ரூபாய், நாட்டுக்கோழி கிலோ, 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
ஆடு, கோழிகளை குளித்தலை, லாலாப்பேட்டை, சேங்கல், பஞ்சப்பட்டி, தோகைமலை பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர்.