Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ டி.என்.பி.எல்., சார்பில் பள்ளிக்கு நிதி உதவி

டி.என்.பி.எல்., சார்பில் பள்ளிக்கு நிதி உதவி

டி.என்.பி.எல்., சார்பில் பள்ளிக்கு நிதி உதவி

டி.என்.பி.எல்., சார்பில் பள்ளிக்கு நிதி உதவி

ADDED : ஜூன் 22, 2025 01:24 AM


Google News
கரூர், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில், சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் தலைமை வகித்தார். காகித ஆலையை சுற்றி அமைந்துள்ள பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்கும், உட்கட்டமைப்பினை மேம்படுத்திடவும், பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தரைதள ஓடு பதிப்பதற்கு நிதியுதவியாக, 76,656 ரூபாய் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், முதன்மை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us