/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கூட்டுறவு பயிர் கடனுக்கு சிபில் ஸ்கோர் ரத்து செய்ய கோரி விவசாயிகள் மனு கூட்டுறவு பயிர் கடனுக்கு சிபில் ஸ்கோர் ரத்து செய்ய கோரி விவசாயிகள் மனு
கூட்டுறவு பயிர் கடனுக்கு சிபில் ஸ்கோர் ரத்து செய்ய கோரி விவசாயிகள் மனு
கூட்டுறவு பயிர் கடனுக்கு சிபில் ஸ்கோர் ரத்து செய்ய கோரி விவசாயிகள் மனு
கூட்டுறவு பயிர் கடனுக்கு சிபில் ஸ்கோர் ரத்து செய்ய கோரி விவசாயிகள் மனு
ADDED : ஜூன் 11, 2025 02:07 AM
கரூர், கூட்டுறவு சங்கங்களில், சிபில் ஸ்கோர் பார்த்த பிறகே, பயிர் கடன் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க, மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் கூட்டுறவுத்துறை மாநில பதிவாளர், கடந்த மாதம், 26-ல், ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், விவசாயிகள் கடன் அட்டை மூலம் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் பெற, விவசாயிகளின் சிபில் ஸ்கோரை பார்த்த பிறகே கடன் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அரசு கணக்கிட்டு வைத்துள்ள, உற்பத்தி செலவின் அடிப்படையில்தான் பயிர் கடன் வழங்கப்படுகிறது. ஆனால், அந்த பயிர் கடன்களை, இரண்டு மடங்கு குறைவாக நிர்ணயித்துள்ளனர். உதாரணத்துக்கு நெல்லுக்கு ஒரு ஏக்கர் பயிர் செய்ய, 76 ஆயிரம் ரூபாய் தமிழக விவசாயிகளுக்கு செலவாகிறது. அரசோ, 36 ஆயிரம் மட்டுமே பயிர் கடனாக வழங்குகிறது.
கூடுதல் செலவுகளை சமாளிக்க, தேசிய வங்கிகளில் பயிர் கடன் பெறும் சூழல் ஏற்படுகிறது. இதுவும் போதாமல் வியாபாரிகள், இடைத்தரர்கள், உரக்கடைகளிடம் கடன் பெற்றுத்தான் விவசாயத்தை செய்ய வேண்டும். தேசிய வங்கிகளில், விவசாயிகளுக்கு சிபில் ரிப்போர்ட் பிரச்னை எழுந்துள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே புகலிடமாக உள்ளது. இங்கும், சிபில் ரிப்போர்ட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டால், விவசாயிகள் பயிர் கடன் பெற முடியாத சூழல் ஏற்படும். இந்த சிபில் ஸ்கோரால், விவசாயத்தில் பெரிய பின்னடைவு ஏற்படும். எனவே, கூட்டுறவு துறையின் சுற்றறிக்கையை ரத்து செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.