Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாயனுாரில் விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மாயனுாரில் விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மாயனுாரில் விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மாயனுாரில் விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 31, 2024 12:04 AM


Google News
கிருஷ்ணராயபுரம்: மாயனுாரில், நீர்வளத்துறை பிரிவு அலுவலக சாலை அருகில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாயனுார் கதவணையால் பாதிக்-கப்பட்ட விவசாயிகள், இழப்பீடு வழங்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒருங்கிணைப்பு குழு செயலாளர் சுப்-பிரமணியன் தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் மாயனுார் காவிரி கதவணை திட்டத்திற்கு, 2008ல் நிலம் கையகப்படுத்தப்-பட்ட விவசாயிகளுக்கு நீர்வளத்துறையும், வருவாய் துறையும் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மாயனுார் கதவ-ணைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் இழப்பீடு, 30 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது. விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் விஜயராகவன், மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, மாவட்ட தலைவர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், ஒருங்கிணைப்பு குழு நிர்வாக கமிட்டி உறுப்பினர் கரி-காலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us