Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பைக் மீது லாரி மோதி இன்ஜி., மாணவர் பலி

பைக் மீது லாரி மோதி இன்ஜி., மாணவர் பலி

பைக் மீது லாரி மோதி இன்ஜி., மாணவர் பலி

பைக் மீது லாரி மோதி இன்ஜி., மாணவர் பலி

ADDED : ஜூன் 25, 2025 02:32 AM


Google News
குளித்தலை, சென்னை தனியார் கல்லுாரியில், மரைன் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்துவந்த, ஆறு மாணவர்கள், கடந்த, 20ல், மூன்று டூவீலர்களில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றனர். செல்லும் வழியில், கரூரில் உள்ள மாணவன் சந்தோஷ் வீட்டில் ஓய்வெடுத்துவிட்டு, மறுநாள் காலை புறப்பட்டனர். அங்கு, இரண்டு நாட்கள் சுற்றுலாவை முடித்துக்கொண்டு, நேற்று மதியம், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக கடலுார் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை சாமியார்பேட்டை தெருவை சேர்ந்த மீனவர் காத்தவராயன் மகன் மணியரசன், 20, என்பவர் மட்டும் தனியாக, 'பல்சர்' டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, மருதுார் சோதனைச்சாவடி அருகே பின்னால் வந்த லாரி மோதியது. இதில், மணியரசன் படுகாயமடைந்தார். அவரை, சக நண்பர்கள் மீட்டு குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மணியரசன் இறந்தார். விபத்து குறித்து குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us