Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் நாளை தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

கரூரில் நாளை தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

கரூரில் நாளை தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

கரூரில் நாளை தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

ADDED : மே 15, 2025 01:42 AM


Google News
கரூர் ;தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது என, கலெக்டர் தங்க

வேல் தெரிவித்துள்ளார்.

கரூர், வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை (16ம் தேதி) காலை 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. 25க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, 200க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளனர். முகாமில், 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் தங்களுடைய சுயவிபர குறிப்பு, உரிய கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்கலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். விபரங்களுக்கு 04324- 223555, 94990 55912 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us