Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ திருச்சி சாலையில் மின் விளக்குகள் தேவை: வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

திருச்சி சாலையில் மின் விளக்குகள் தேவை: வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

திருச்சி சாலையில் மின் விளக்குகள் தேவை: வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

திருச்சி சாலையில் மின் விளக்குகள் தேவை: வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

ADDED : ஜூலை 01, 2025 12:59 AM


Google News
கரூர், கரூர்-திருச்சி விரிவாக்க சாலையில், மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர்-திருச்சி சாலை, புலியூரில் இருந்து வீரராக்கியம் பிரிவு வழியாக திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இணைகின்றன. இதனால், புலியூர் முதல் திருச்சி தேசிய நெடுஞ்சாலை வரை, சாலை விரிவாக்க பணிகள் சமீபத்தில் தொடங்கியது. தற்போது சாலை விரிவாக்க பணிகள் நிறைவு பெற்று, சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், மின் கம்பங்கள் அமைக்கப்படவில்லை. இதனால், கரூர்-திருச்சி சாலை, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இருளில் மூழ்கியுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, புதிய கரூர்-திருச்சி விரிவாக்க சாலையில் மின் கம்பங்கள் அமைத்து, விளக்குகளை பொருத்த மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us