Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பைக் மோதி முதியவர் பலி

பைக் மோதி முதியவர் பலி

பைக் மோதி முதியவர் பலி

பைக் மோதி முதியவர் பலி

ADDED : அக் 21, 2025 01:24 AM


Google News
குளித்தலை, குளித்தலை அருகே நடந்து சென்ற முதியவர் மீது, பைக் மோதியதில் இறந்தார்.

குளித்தலை அடுத்த இரணியமங்கலம் பஞ்., வளையப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த குமரவேலு, 68, விவசாய கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில் அய்யர்மலை குமாரமங்கலம் நெடுஞ்சாலையில், வளையப்பட்டி பஞ்., அலுவலம் எதிரில், குமரவேலு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பணிக்கம்பட்டியில் இருந்து அய்யர்மலை நோக்கி சென்ற பைக் முதியவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.குளித்தலை போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி, உடல் கூறு ஆய்வுக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய முசிறியை சேர்ந்த குமரேசன் என்பவர் மீது, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us