/உள்ளூர் செய்திகள்/கரூர்/பள்ளப்பட்டியில் இருந்து கரூருக்கு அதிகாலை பஸ் இயக்க கோரிக்கைபள்ளப்பட்டியில் இருந்து கரூருக்கு அதிகாலை பஸ் இயக்க கோரிக்கை
பள்ளப்பட்டியில் இருந்து கரூருக்கு அதிகாலை பஸ் இயக்க கோரிக்கை
பள்ளப்பட்டியில் இருந்து கரூருக்கு அதிகாலை பஸ் இயக்க கோரிக்கை
பள்ளப்பட்டியில் இருந்து கரூருக்கு அதிகாலை பஸ் இயக்க கோரிக்கை
ADDED : ஜன 05, 2024 11:16 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அடுத்த பள்ளப்பட்டியில் ஜவுளி தொழில், பைனான்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் தவணை முறை தொழில் உட்பட பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர்.
அருகில் உள்ள கரூருக்கு, தினசரி சென்று இரவு வீடு திரும்புகின்றனர். அதிகாலை கிளம்பி செல்ல பஸ் வசதி இல்லாததால், தொழில் செய்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் கல்லுாரி மாணவர்கள் அதிகாலையில் எழுந்து செல்ல வேண்டி இருப்பதால், பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
கொரோனா காலத்திற்கு முன்பு அதிகாலை, 3:00 மணிக்கு இயக்கப்பட்டு வந்த பஸ் தற்போது, 5:00 மணி என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், தொழில் செய்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி, பள்ளப்பட்டி அரவக்குறிச்சி சாலை வழியாக கரூருக்கு செல்ல பஸ் ஏற்பாடு செய்ய வேண்டும் என, இப்
பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.