ADDED : ஜூலை 04, 2024 08:56 AM
கரூர் : கரூர் மாவட்ட வேளாண்மை துறை சார்பில், அட்மா திட்டத்தில், விவசாயிகள் தெலுங்கானா மாநிலம், ைஹதராபாத்தில் உள்ள, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் நிறு வனத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அதில், மானாவாரி நிலத்தில் விவசாயம் மேற்-கொள்ளும் முறைகள், மழைநீரை பண்ணை குட்டை மூலம் சேமிக்கும் முறைகள், இயற்கை வேளாண்மை, விவசாய இடு பொருட்கள் தயா-ரிக்கும் முறைகள் குறித்து செயல் விளக்க படம் மூலம், வேளாண்மை துறை விஞ்ஞானிகள் பயிற்சி அளித்தனர். ஐந்து நாள் சுற்றுலாவில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த, 20 விவசாயிகள் பங்கேற்றனர்.
வேளாண்மை துறை உதவி தொழில் நுட்ப அலு-வலர்கள் சுரேஷ், கார்த்திகேயன் ஆகியோர், சுற்-றுலா ஏற்பாடுகளை
செய்திருந்தனர்.