Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

ADDED : செப் 09, 2025 01:32 AM


Google News
குளித்தலை, குளித்தலை அடுத்த, இனுங்கூர் பஞ்., குப்புரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜானகி, 37. விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் பெரியக்காள், 19. இவர் நாமக்கல் மாவட்டம், எருமாபள்ளி தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த, 31ல் வீட்டுக்கு வந்தவர், கடந்த, 5 காலை, 8:30 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர், மருத்துவமனைக்கு செல்லவில்லை. இது குறித்து விசாரித்தபோது, மருத்துவமனைக்கு வரவில்லை என தெரிவித்தனர்.

தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us