Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

ADDED : செப் 07, 2025 01:01 AM


Google News
குளித்தலை குளித்தலை அடுத்த, சேங்கல் பஞ்., முத்துரங்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம்மாள், 40. இவரது மகள் நித்திஷா, 19. கோமாளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். நித்திஷா தனது கணவருடன் குடும்பம் நடத்தி வந்த போது, ஏற்பட்ட பிரச்னை காரணமாக கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டில் இருந்து வந்தார்.

கடந்த 4ம் தேதி காலை, 10:00 மணியளவில் வெளியே சென்று வருவதாக கூறிச் சென்றவர், வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us