Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கல்லுமடையில் சேதமடைந்துள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி

கல்லுமடையில் சேதமடைந்துள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி

கல்லுமடையில் சேதமடைந்துள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி

கல்லுமடையில் சேதமடைந்துள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி

ADDED : ஜூலை 02, 2025 02:05 AM


Google News
கரூர், கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம், மணவாடி பஞ்சாயத்துக்குட்பட்ட கல்லுமடையில், ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். அவர்கள், பயன்பாட்டுக்காக குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது.

அதன் மூலம், வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேல்நிலை குடிநீர் தொட்டி தற்போது, சேதமடைந்துள்ளது. சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேல்நிலை குடிநீர் தொட்டியில், பராமரிப்பு பணிக்காக மேலே ஏறி செல்ல முடியாமல், துாய்மை பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். தொட்டியை, சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us