Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாயனுார் சாலை சேதம்; வாகன ஓட்டிகள் அவதி

மாயனுார் சாலை சேதம்; வாகன ஓட்டிகள் அவதி

மாயனுார் சாலை சேதம்; வாகன ஓட்டிகள் அவதி

மாயனுார் சாலை சேதம்; வாகன ஓட்டிகள் அவதி

ADDED : ஜூன் 16, 2025 07:41 AM


Google News
கரூர்: மாயனுார் செல்லும் சாலை, குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் உள்ளனர்.

கரூர் மாவட்டம், கட்டளை-மாயனுார் சாலை வழியாக, நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு லாரி, கார், வேன்கள் சென்று வருகின்றன. அந்த சாலையில், பள்ளிகள் மற்றும் அதிகளவில் வீடுகள் உள்ளன. காவிரியாற்றில் உள்ள, நீர்த்தேக்க கிணறுகளுக்கும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கட்டளை முதல் மாயனுார் வரை ரங்கநாதபுரம், கீழமாயனுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது.இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்கிறவர்கள், அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர். எனவே, கட்டளை முதல் மாயனுார் வரை, குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை, தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us