/உள்ளூர் செய்திகள்/கரூர்/ புதுப்பெண்ணுக்கு அடி; கணவன் மீது வழக்கு பதிவு புதுப்பெண்ணுக்கு அடி; கணவன் மீது வழக்கு பதிவு
புதுப்பெண்ணுக்கு அடி; கணவன் மீது வழக்கு பதிவு
புதுப்பெண்ணுக்கு அடி; கணவன் மீது வழக்கு பதிவு
புதுப்பெண்ணுக்கு அடி; கணவன் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூன் 21, 2025 01:23 AM
கரூர், கரூர் அருகே, புதுப்பெண்ணை அடித்ததாக கணவன் உள்பட, மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குளித்தலை சீத்தப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 27; இவருக்கும், தான்தோன்றிமலை தென்றல் நகரை சேர்ந்த அபிராமி, 26; என்ற பெண்ணுக்கும் கடந்த, மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த, 7ல் குடும்ப தகராறு காரணமாக அபிராமியை, அவரது கணவன் சதீஷ்குமார், மாமனார் மாணிக்கம், 50; மாமியார் தனலட்சுமி, 48; ஆகிய, மூன்று பேரும் மிரட்டி அடித்துள்ளனர்.
இதுகுறித்து, அபிராமி கொடுத்த புகாரின்படி, தான்தோன்றி மலை போலீசார் சதீஷ் குமார் உள்பட, மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


