ADDED : ஜூன் 09, 2025 04:24 AM
கரூர்: க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், வருவாய் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் இன்ஜினியரிங் கல்லுாரி உள்ளிட்டவை செயல்படுகின்றன. கடைவீதியில் வாரச்-சந்தை, கால்நடை சந்தைகள் செயல்படுகின்றன. சுற்று வட்டார மக்கள் பல்வேறு தேவைகளுக்காக
க.பரமத்தி கடைவீதிக்கு வந்து செல்கின்றனர்.க.பரமத்தியில் பஸ் ஸ்டாண்ட் வசதி இல்லாததால், பயணிகள் பஸ்சுக்காக சாலையின் இருபுறமும் காத்திருக்கின்றனர். அந்த நேரங்களில் கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேக-மாக செல்லும் வாகனங்களால் ஆபத்து ஏற்படும் சூழல் இருக்கி-றது. மக்கள் நலன் கருதி க.பரமத்தியில் பஸ்ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.