Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/திருஞானசம்பந்தர் மடாலயத்தில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்

திருஞானசம்பந்தர் மடாலயத்தில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்

திருஞானசம்பந்தர் மடாலயத்தில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்

திருஞானசம்பந்தர் மடாலயத்தில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்

ADDED : ஜூலை 13, 2024 08:18 AM


Google News
ப.வேலுார்: ஆனி திருமஞ்சனத்தையொட்டி, ப.வேலுார், சுல்தான்பேட்டை திருஞானசம்பந்தர் மடாலயத்தில், நேற்று நடராஜருக்கு அபி-ஷேகம் நடந்தது.காலை, 8:00 மணிக்கு தொடங்கி, மதியம், 12:00 மணி வரை தேவாரம், திருவாசகத்துடன், 16 வகையான திரவியங்களால் அபி-ஷேகம் நடந்தது.

மதியம், 1:00 மணிக்கு சிவகாமி அம்பாள் தங்க கவசத்திலும், நடராஜ பெருமான் வெள்ளி கவசத்திலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. மதியம் 2:00 மணிக்கு மகேஸ்வர பூஜையுடன் அன்னதானம் நடந்தது. விழாவில் கலந்துகொண்ட சிவனடியார்கள் மற்றும் பொதுமக்களுக்கு திருமஞ்சன பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருஞானசம்பந்தர் மடம் நிர்வாகி ராமலிங்கம் மற்றும் சிவனடியார்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us