/உள்ளூர் செய்திகள்/கரூர்/சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரிசிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி
சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி
சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி
சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி
ADDED : பிப் 10, 2024 10:24 AM
கரூர்: புன்னம் சத்திரம், கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் நடந்தது.
அங்காள பரமேஸ்வரி கோவிலில், தை மாத அமாவாசையொட்டி, மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. பின், சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் மூலவர் காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும், திருகாடுதுறை மாதேஸ்வரி அம்பிகை கோவில், வேலாயுதம்பாளையம் சேமங்கி மஹா மாரியம்மன் கோவில், நத்தமேடு அங்காளம்மன் கோவில், பவித்திரம் பாலசுப்பிர மணிய சுவாமி கோவில், புகளூர் மேகமாலீஸ்வரர் கோவில் களிலும் சிறப்பு அபிேஷகம் நடந்தது.