Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நெடுஞ்சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து அதிகரிப்பு

நெடுஞ்சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து அதிகரிப்பு

நெடுஞ்சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து அதிகரிப்பு

நெடுஞ்சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து அதிகரிப்பு

ADDED : மே 30, 2025 01:18 AM


Google News
கரூர்,:கரூரில், தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், விபத்துகள் அதிகரித்து வருகிறது.கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சுக்காலியூரில் இருந்து வீரராக்கியம் முதல் மாயனுார் வரை நான்கு வழிச்சாலையாக உள்ளது. மாயனுார் முதல் பெட்டவாய்த்தலை வரை, இரண்டு வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக பஸ் உள்பட கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகளவு உள்ளது. சுக்காலியூர், வெங்ககல்பட்டி மேம்பாலம், உப்பிடமங்கலம் பிரிவு, வீரராக்கியம் பிரிவு, மாயனுார் பகுதிகளில் சாலையோரம் ஹோட்டல்கள் உள்ளன.

நீண்ட துாரம் பயணிக்கும் கனகர வாகன ஓட்டுனர்கள், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு ஓய்வெடுக்கின்றனர். இதன் காரணமாக, இரவு நேரங்களில் அவ்வப்போது விபத்துகளும் நடக்கிறது. கரூர் - திருச்சி பைபாஸ் சாலையில், சாலையோரம் கனரக வாகனங்கள் நிறுத்துவது குறித்து, கண்காணித்து முறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us