Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிக்னல் லைட் பழுதால் விபத்து அபாயம்

கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிக்னல் லைட் பழுதால் விபத்து அபாயம்

கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிக்னல் லைட் பழுதால் விபத்து அபாயம்

கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிக்னல் லைட் பழுதால் விபத்து அபாயம்

ADDED : மார் 24, 2025 06:50 AM


Google News
கரூர்: கரூர் அருகே, போக்குவரத்து சிக்னல் செயல்படாமல் உள்ளதால், அப்பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், பல்வேறு இடங்களில் போக்குவரத்தை சீர் செய்யவும், விபத்துகளை தடுக்கவும், சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், பல இடங்களில் சிக்னல் விளக்குகள் சேதமடைந்து எரியாத நிலையில் உள்ளது.குறிப்பாக, கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அம்பாள் நகர் பிரிவு பகுதியில், பல மாதங்களாக சிக்னல் விளக்குகள் எரியாமல் சேதமடைந்துள்ளது. இதனால், கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கரூர் நகர பகுதிக்கு செல்லும் வாகனங்கள், மதுரை, திண்டுக்கல் மாவட்ட பகுதியில் இருந்து, கோவை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகனங்கள் அடிக்கடி போக்குவரத்தில் சிக்கிகொள்கிறது.

மேலும், கரூர் நகரில் இருந்து அம்பாள் நகர் உள்ளிட்ட, பல பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும், விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால், சிறு சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அம்பாள் நகர் பிரிவில், செயல்படாமல் சேதமடைந்துள்ள, சிக்னல் விளக்குகளை, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us