/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாட்டு வண்டி மீது பைக் மோதியதில் வாலிபர் பலிமாட்டு வண்டி மீது பைக் மோதியதில் வாலிபர் பலி
மாட்டு வண்டி மீது பைக் மோதியதில் வாலிபர் பலி
மாட்டு வண்டி மீது பைக் மோதியதில் வாலிபர் பலி
மாட்டு வண்டி மீது பைக் மோதியதில் வாலிபர் பலி
ADDED : பிப் 10, 2024 07:32 AM
குளித்தலை : குளித்தலை அடுத்த, கருப்புத்துார் பஞ்., மேல தள்ளியம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் தனபால், 30. கடந்த, 8 இரவு, 10:00 மணியளவில் ட்ரீம் மொபட்டில் தன் வீட்டிலிருந்து தெற்கு தெருவில் உள்ள, மற்றொரு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சீகம்பட்டி தாளியாம்பட்டி ரோட்டில் மேல தாளியம்பட்டி சிதம்பரம் என்பவர் தோட்டம் அருகே, அதே ஊரை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மாட்டு வண்டி நிறுத்தப்பட்டிருந்தது.
வேகமாக வந்த இவர், மாட்டி வண்டி பின்னால் மோதினார். இதில் தனபால் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, முசிறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தனபால் தந்தை சுப்பிரமணி கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.