Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பைக்கில் சென்ற கொத்தனார் நாய் குறுக்கே வந்ததால் பலி

பைக்கில் சென்ற கொத்தனார் நாய் குறுக்கே வந்ததால் பலி

பைக்கில் சென்ற கொத்தனார் நாய் குறுக்கே வந்ததால் பலி

பைக்கில் சென்ற கொத்தனார் நாய் குறுக்கே வந்ததால் பலி

ADDED : மே 19, 2025 01:48 AM


Google News
குளித்தலை: குளித்தலை அடுத்த மேட்டு மகாதானபுரம், வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் சிவக்குமார், 55; கொத்தனார். கடந்த, 12ல் தனக்கு சொந்தமான டூவீலரில் சொந்த வேலையாக சித்தலவாய் - பஞ்சப்பட்டி நெடுஞ்சாலையில், கோவக்குளம் அருகே சென்று-கொண்டிருந்தார்.

அப்போது, நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதனால், நிலை தடு-மாறி கீழே விழுந்த சிவக்குமாருக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்-லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அவரது தாயார் ஜெகதாம்பாள், 70, கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us