/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஆத்துப்பாளையம் அணைக்கு 175 கனஅடி தண்ணீர் வரத்து ஆத்துப்பாளையம் அணைக்கு 175 கனஅடி தண்ணீர் வரத்து
ஆத்துப்பாளையம் அணைக்கு 175 கனஅடி தண்ணீர் வரத்து
ஆத்துப்பாளையம் அணைக்கு 175 கனஅடி தண்ணீர் வரத்து
ஆத்துப்பாளையம் அணைக்கு 175 கனஅடி தண்ணீர் வரத்து
ADDED : ஜூன் 04, 2025 01:23 AM
கரூர், கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 204 கன அடியாக அதிகரித்தது.
அந்த தண்ணீர் முழுவதும் குடிநீர் தேவைக்காக, காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட் டது.
க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து, 175 கன அடியாக இருந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 16.79 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
நிறுத்தப்பட்டுள்ளது.