Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஆதனுாரில் 116 வயது முதியவர் உயிரிழப்பு உறவினர்கள் ஆடிப்பாடி நல்லடக்கம்

ஆதனுாரில் 116 வயது முதியவர் உயிரிழப்பு உறவினர்கள் ஆடிப்பாடி நல்லடக்கம்

ஆதனுாரில் 116 வயது முதியவர் உயிரிழப்பு உறவினர்கள் ஆடிப்பாடி நல்லடக்கம்

ஆதனுாரில் 116 வயது முதியவர் உயிரிழப்பு உறவினர்கள் ஆடிப்பாடி நல்லடக்கம்

ADDED : செப் 20, 2025 02:11 AM


Google News
குளித்தலை, குளித்தலை அருகே, 116 வயது முதியவர் இறந்ததால் உறவினர்கள், கிராம மக்கள் ஆடிப்பாடி நல்லடக்கம் செய்தனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த சிவாயம் பஞ்., ஆதனுாரில் வீரமலை என்பவருக்கு, 5வது மகனாக பொன்னுசாமி என்பவர், 1909ம் ஆண்டு பிறந்தார். இவர் விவசாயம் மற்றும் கால்நடை மேய்ச்சல் தொழிலை செய்து வந்தார். இவருக்கு 2 மகன்கள், 5 பெண் குழந்தைகள், 15 பேரக்குழந்தைகள், 18 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர்.

இவர் சிறுதானிய உணவுகளை உண்டு வந்ததோடு, அதிகமாக காலையில் நீராகாரம், உணவில் பசுமாட்டு பாலை எடுத்து வந்துள்ளார். மேலும் உணவு கட்டுபாட்டோடு இருந்து வந்துள்ளார். இவர் வெற்றிலை போடுவதில் ஆர்வம் கொண்டவர். மதுபானங்களை முற்றிலும் தவிர்த்து, மருத்துவமனை செல்லாமல், உடல் நலத்தில் கவனமாக இருந்துள்ளார். கிராமங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள், சுபகாரியங்கள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்தியவர். ஆதனுார் உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள அனைவரும், பொன்னுசாமி மீது மிகுந்த நன்மதிப்பை வைத்துள்ளனர்.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக, நேற்று முன்தினம் மதியம் பொன்னுசாமி தனது, 116 வது வயதில் இறந்தார். இதையடுத்து ஆதனுார் உள்பட சுற்று வட்டார மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்து இறுதி ஊர்வலமாக, அவரது உடலை பூந்தேரில் எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்து மரியாதை செலுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us