Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வெள்ளியணை அருகே 105 வயது மூதாட்டி தவறி விழுந்து உயிரிழப்பு

வெள்ளியணை அருகே 105 வயது மூதாட்டி தவறி விழுந்து உயிரிழப்பு

வெள்ளியணை அருகே 105 வயது மூதாட்டி தவறி விழுந்து உயிரிழப்பு

வெள்ளியணை அருகே 105 வயது மூதாட்டி தவறி விழுந்து உயிரிழப்பு

ADDED : மே 14, 2025 01:57 AM


Google News
கரூர், திண்டுக்கல் மாவட்டம், கணக்குபிள்ளையூர் பகுதியை சேர்ந்த காத்தவராயன் என்பவரது மனைவி முத்தம்மாள், 105. இவர், கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே பள்ளமருதப்பட்டியில் உள்ள, மகள் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த, 12ல் இயற்கை உபாதைக்காக நடந்து சென்ற போது, முத்தம்மாள் தவறி கீழே விழுந்தார். அதில், படுகாயமடைந்த அவரை, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.இதுகுறித்து, முத்தம்மாளின் மகன் துரைசாமி, 62, கொடுத்த புகார்படி, வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us