Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ திருச்சி--உப்பிடமங்கலம் பிரிவு சாலையில் வேகத்தடை தேவை

திருச்சி--உப்பிடமங்கலம் பிரிவு சாலையில் வேகத்தடை தேவை

திருச்சி--உப்பிடமங்கலம் பிரிவு சாலையில் வேகத்தடை தேவை

திருச்சி--உப்பிடமங்கலம் பிரிவு சாலையில் வேகத்தடை தேவை

ADDED : ஜூலை 03, 2024 07:29 AM


Google News
கரூர்: புலியூரில், திருச்சி--உப்பிடமங்கலம் பிரிவு பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதால், வேகத்தடை அமைக்க வேண்டும்.

புலியூர் டவுன் பஞ்சாயத்து அலுவலகம் அருகே, திருச்சி நெடுஞ்-சாலையில் இருந்து உப்பிடமங்கலம் பிரிவு சாலை உள்ளது. இந்த சாலை வழியாக புலியூர் தனியார் சிமென்ட் ஆலைக்கு தொழிலாளர்கள், உப்பிடமங்கலம் வாரச்சந்தைக்கு காய்கறி வியா-பாரிகள் மற்றும் கால்நடை வியாபாரிகள் சென்று வருகின்றனர்.

புலியூரில் உள்ள ராணி மெய்யம்மை பள்ளிக்கு மாணவ, மாணவி-களை ஏற்றி செல்லும் வாகனங்களும், இந்த பிரிவு சாலை வழி-யாகத்தான் சென்று வருகின்றன. கரூரில் இருந்து திருச்சி, தஞ்சை, நாகை, அரியலுார், பெரம்பலுார், சென்னை செல்லும் பஸ்கள், இந்த சாலை வழியாகத்தான் செல்கின்றன.

எப்போதும் வாகனங்கள் சென்று வரும் இந்த சாலையில், அதி-வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படு-கின்றன.

சாலையில் அமைக்கப்பட்டிருக்கும், தடுப்பு சுவர்கள் வழியாக நாய்கள் புகுந்து விடுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். விபத்துகள் அடிக்கடி நிகழ்வதை தடுக்கும் வகையில், திருச்சி-உப்பிடமங்கலம் பிரிவு சாலையில், போர்க்கால அடிப்படையில் வேகத்தடை அமைக்க பஞ்., நிர்-வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us